"இந்த" ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க.. வாழ்க்கையில் காசு பிரச்சனை கண்டிப்பாக வராது! ரொம்ப ஈஸி தான்
சென்னை: இந்தக் காலத்தில் இளைஞர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை முறையாகக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கிறது. இதனால் பெரும்பாலான இளைஞர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி நீங்கள் எந்தவொரு நிதிப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டியது இந்த ஒரு ரூல்ஸ்ஸை மட்டும் தான்.. அதென்ன ரூல்ஸ்.. இது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மாறி வரும் இந்த நவீனக் காலத்தில் இளைஞர்கள் பலரும் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலான இளைஞர்களுக்கு மாதக் கடைசியில் பணமே இல்லாத ஒரு சூழலே இருக்கிறது. வருமானத்திற்கு ஏற்ப தங்கள் செலவுகளைச் செய்ய முடியாததே இதற்குக் காரணமாகும். இதனால் பல்வேறு இளைஞர்களும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்.

ஒரே ரூல்ஸ்
அப்படி எந்தவொரு பிரச்சினையும் இருக்கவே கூடாது என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டியது 30:30:30:10 என்ற ரூல்ஸை தான். இது, உங்கள் வருவாயையும், ஓய்வூதியத் திட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம் என்ற ஐடியாவை உங்களுக்கு வழங்குகிறது. பட்ஜெட், முதலீடு, மற்றும் ஓய்வூதியக் காலத்தை எளிதாகக் கையாள இந்த விதி வழிகாட்டியாக இருக்கும்.
எதற்கு ஒதுக்க வேண்டும்
உங்களுக்கு வரும் சம்பளத்தில் முதல் 30% வருவாயை அத்தியாவசியத் தினசரி செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும்.. வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைப் பொருட்கள், எரிபொருள் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை இது பூர்த்தி செய்யும். வருமானம் முழுக்க செலவுக்குப் போனாலும் போதவில்லை என நீங்கள் சொன்னால் நீங்கள் வரவை தாண்டிச் செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை முறையைக் கொஞ்சம் மாற்றி செலவுகளைக் குறைக்கவும்! உங்கள் செலவுகள் இந்த 30% என்ற மேஜிக் நம்பரை தாண்டாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த 30% உங்கள் முதலீட்டிற்காக ஒதுக்க வேண்டும்.. நீங்கள் ஓய்வு பெற்ற எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதலீடு செய்யுங்கள்.. பங்கு, கடன் பத்திரம், தங்கம் எனப் பல முதலீடு ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் வயது, நெட் ஒர்த், உங்களுக்கு இருக்கும் கடமைகளைப் பொறுத்து முதலீடுகள் மாறுபடும்.!
30% ஓய்வுக்கு ஒதுக்க வேண்டும்
அடுத்த 30% தொகையை நீங்கள் ஓய்வுக் காலச் சேமிப்பிற்குப் பயன்படுத்த வேண்டும். நம்மில் பலரும் கோட்டை விடுவது இதில் தான். ஓய்வு பெறப் பல காலம் இருக்கிறது என நினைத்துக் கொண்டு அதற்கு எந்தவொரு செலவையும் செய்ய மாட்டோம். ஆனால், நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்கு ஓய்வுக் காலத்தை நெருங்கி இருப்பீர்கள். எனவே, எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் ஓய்வுக்கான சேமிப்பை ஆரம்பிக்கவும்.
ஏற்கனவே 30% முதலீடு செய்கிறேனே.. இது எதற்குத் தனியாக என நீங்கள் கேட்கலாம். கூடுதல் சேமிப்பு எப்போதுமே நல்லதுதான். அதுவும் இந்தக் காலத்தில் பென்ஷன் கூட கிடைக்காது. எனவே, நாம் தான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்கள் இருந்தால் அதைக் கட்டவும் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.
கடைசி 10% தொகை
கடைசி 10% தொகை எமர்ஜென்சிக்கு ஒதுக்க வேண்டும் என இந்த ரூல்ஸ் சொல்கிறது. எந்த வயதினராக இருந்தாலும், எதிர்பாராத நிதி சவால்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.. மருத்துவ எமர்ஜென்சி அல்லது வேலையிழப்பு போன்ற சூழ்நிலைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, இந்த 10% தொகையை அவசரத் தேவைகளுக்காக வைத்திருக்கவும்! இந்த எமர்ஜென்சி தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்! ஏனென்றால் அவசரக் காலத்தில் சந்தை இறங்கி இருந்தால் அது பயனே இல்லாமல் போய்விடும்.
இப்படித் திட்டமிட்டு செலவு செய்தால் உங்களுக்குப் பெரும்பாலான பிரச்சினைகள் வராது. இதில் இரு விஷயங்கள் தான் ரொம்பவே முக்கியம்.. முதலில் தேவையற்ற செலவுகளைச் செய்யக்கூடாது.. அடுத்து தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டும். அந்த கன்சிஸ்டென்சியை எப்போதும் விட்டுவிடவே கூடாது!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications