தடுப்பூசி போடலியா.. பேங்க், ஹோட்டல் கூட போக முடியாது.. தடை போட்ட ஹரியானா அரசு
சண்டிகர்:தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலத்தில் உள்ள வங்கி, உணவகங்கள், கிளப்புகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அனுமதி கிடையாது என ஹரியானா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை பல்வேறு மாநிலங்களில், 550க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா அதைத் தொடர்ந்து டெல்லி , தெலங்கானா, பேரும், கர்நாடகா, குஜராத், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோர் கொரோனா மற்றும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.
பொதுவெளியில் கூட்டம் கூடுவதோ, கூட்டங்களிலோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளுங்கள் எனவும் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலத்தில் உள்ள வங்கி, உணவகங்கள், கிளப்புகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அனுமதி கிடையாது என ஹரியானா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் பிறப்பித்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாதவர்கள் பார்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் மதுக்கடைகள் போன்ற பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களிலும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே அத்தகைய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் இந்த உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படும் எனவும், உள்ளூர் சந்தைகள், மால்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் மற்றும் ஹோட்டல்களுக்குள் நுழைவதற்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுகுறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications