15 வயாகரா மாத்திரை தந்த மனைவி! பாலியல் உறவின்போது கணவர் மரணம் என ஒப்பாரி! வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: உறவு சிக்கல்கள், தகாத உறவுகள் காரணமாக வன்முறைகள் வெடித்து வருகின்றன.. கள்ளக்காதல் அட்டகாசங்கள் அதிகரித்து வரும்நிலையில், அப்பாவி கணவன் அல்லது மனைவியின் உயிர்களும் காவு வாங்கப்பட்டு விடுகின்றன. தெலுங்கானாவிலும் அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலுக்கு கணவன் குறுக்கே வந்துவிடுகிறார் என்ற ஆத்திரம் மனைவிக்கு நீடித்தபடி இருந்ததால், அது கொலை வரை சென்றுள்ளது. இதுதொடர்பாக மனைவி தந்த வாக்குமூலம் தற்போது வெளியாகியிருக்கிறது. .
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது சத்பகிரி என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் தம்பதி சுரேஷ் - மவுனிகா.. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

உடலுறவின்போது மரணம்
இதனிடையே மனைவி மவுனிகாவிடம் பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளார் கணவர் சுரேஷ்.. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
பிறகு சுரேஷின் அம்மாவுக்கு போன் செய்து, உடலுறவின்போது சுரேஷ் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷின் அம்மா விரைந்து வந்து, சுரேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து கரீம்நகர் போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போதுதான், மவுனிகாவின் கள்ளக்காதல் அம்பலமானது. இறுதியில், மவுனிகா, கள்ளக்காதலன் அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
குறுக்கே நின்ற கணவர்
இதனிடையே மவுனிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது போலீசாரிடம் மவுனிகா தந்த வாக்குமூலத்தில், "பண தேவைக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பிருந்தே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளேன். அப்போதுதான் எனக்கு தொம்மட்டி அஜய் என்பவர் அறிமுகமானார். அவருடன் தகாத உறவு வளர்ந்து வந்தது.
இந்த விஷயம் என் கணவருக்கு தெரிந்துவிட்டது. எங்கள் காதலுக்கு கணவர் குறுக்கே இருப்பதாக அஜய்யிடம் சொன்னேன்.. அதற்கு அஜய், சுரேஷை தீர்த்துகட்டிவிடலாம் என்றார்.. அஜய்யின் அறிவுறுத்தலின்படியே கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
15 வயாகரா மாத்திரை
எனக்கு இந்த கொலைக்கு உதவி செய்த ஸ்ரீஜா, ராதா இருவருமே பாலியல் தொழிலாளிகள்.. அவர்களிடம் கணவரை கொலை செய்ய ஐடியா கேட்டேன்.. அவர்கள் மூலம்தான் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் சிவகிருஷ்ணா என்பவர் அறிமுகமானார். அவர் 15 வயாகரா மாத்திரைகளை எனக்கு தந்து, கணவருக்கு தர சொன்னார்.
நானும் வீட்டில் மட்டன் குழம்பு வைத்து, அதில் 15 வயாகரா மாத்திரைகளை கலந்து என் கணவருக்கு சாப்பிட தந்தேன். ஆனால், மட்டன் குழம்பில் வித்தியாசமான வாசனை வரவும், அதை அவர் சாப்பிடவில்லை.
உடலுறவின்போது மரணம்
இதற்கு பிறகுதான், இரத்த அழுத்த மாத்திரைகள், தூக்க மாத்திரைகளை தூள் செய்து, மதுவில் கலந்து கணவருக்கு குடிக்க தந்தேன். அதை குடித்து கணவர் மயங்கி விழுந்துவிட்டார்.. உடனே என்னுடைய புடவையாலேயே அவரை தூக்கு மாட்டி தொங்கவிட்டு கொலை செய்தேன். பிறகு என்னுடைய மாமியாருக்கு போன் செய்து, உடலுறவின்போது கணவர் இறந்துவிட்டதாக நாடகம் ஆடினேன்" என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளுக்கு கரீம்நகர் காவல் துறை உயரதிகாரி கவுஷ் ஆலம் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications