தூக்கில் தொங்கிய கயிறு எங்கே.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே.. உலுக்கிய பாத்திமா மரணம்
பாத்திமாவின் தற்கொலை மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது
Recommended Video
சென்னை: எத்தனையோ தற்கொலைகளுக்கு முடிவு கிடைத்தாலும்.. இந்த வருடம் நடந்த ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கான தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை.. "முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காடுகூட என் மகளை அணியவிடவில்லை. முக்காடு அணிந்திருந்தால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு எதாவது தொல்லை வரும் என்று நாங்கள் பயந்து கிடந்தோம்.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதான் அனுப்பி வெச்சோம்" என்று பாத்திமாவின் அம்மா பேசியதற்கு சரியான பதிலடியை யாராலும் தர முடியவில்லை என்பதே நிஜம்!
கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப்.. சென்னை ஐஐடி வளாகத்தில், தன்னுடைய ஹாஸ்டல் ரூமிலேயே நவம்பர் 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தனக்கு வழக்கமாக போன் செய்யவில்லை என்றதுமே, பெற்றவர்கள் போனில் தொடர்பு கொண்டும் முடியவில்லை.. இதற்கு பிறகுதான் பக்கத்து ரூம் பிள்ளைகளை அனுப்பி என்ன ஏதென்று பார்க்க சொல்லவும், பாத்திமா தூக்கில் சடலமாக கிடந்தார்.
இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தன்னுடைய தற்கொலைக்கு காரணம் 3 பேராசிரியர்களே என்று பாத்திமா எழுதி வைத்துவிட்டு போன குறிப்பு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

பாத்திமா
அதனால், பாத்திமாவின் செல்போன், லேப்டாப்களும் தடயவியல் துறையினரால் ஆராயப்பட்டது. தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல, செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமித்ஷா
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி, அமித்ஷா, பிரதமர் போன்றோரை பாத்திமாவின் பெற்றோர் சந்தித்து மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு வலியுறுத்தி வந்தனர்.. இதனடிப்படையில் சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூக்கு கயிறு
ஆனால், "என் மகளின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது.. தற்கொலைக்கான அறிகுறிகள் எனது மகள் உடலில் இல்லை... செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் அறையில் கிடந்தது.. எனது மகள் தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது. அது எங்கு கிடைத்தது. இப்போது அது எங்கே உள்ளது. எனது மகள் மரணித்த பிறகு அவரது அறையை பூட்டி ஏன் சீல் வைக்கவில்லை" என்று பாத்திமாவின் அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் இன்னமும் இல்லை!

பாதுகாப்பு
"தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதானே அனுப்பி வெச்சோம்" என்று பாத்திமாவின் அம்மா கேட்டதற்கும் பதில் இல்லை.. திமுக தலைவர் முக ஸ்டாலின் கேட்டதுபோல, ஐஐடியா? மர்ம தீவா? என்ற சந்தேகம் மட்டுமே நமக்கும் எழுந்துள்ளது. இந்த 5 வருஷத்தில் மட்டும், 10 ஐஐடிகளில் மொத்தம் 27 மாணவர்கள் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்த 27 பேரில் 7 மாணவர்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்தான் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையே தெரிவித்துள்ளதை என்னவென்று சொல்வது?

தாக்கம்
எப்படி பார்த்தாலும் இனி ஒரு உயிரிழப்பு, ஐஐடி என்ற மிகப்பெரிய கல்வி நிறுவன வளாகத்துக்குள் நடந்துவிடக்கூடாது என்பதே நிஜம்! அப்படி ஒரு தாக்கத்தைதான் இந்த வருடம் பாத்திமா தற்கொலை நமக்கு ஏற்படுத்திவிட்டு போயுள்ளது!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications