ஜம்மு - காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்கள்.. பத்திரமாக மீட்கப்படுவார்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னை: ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயின்று வரும் 41 மாணவர்கள் பாதுகாப்புடன் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறியதோடு, அவர்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ஜெய்சல்மார், பூஞ்ச், உரி உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலை தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்திய பாதுகாப்பு படை அலர்ட்-ஆக இருந்து வந்தது. இதனால் பாகிஸ்தானின் தாக்குதலை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக முறியடித்தது.
இதனிடையே ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அங்கு கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பு திரும்ப ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதினர். இந்த நிலையில் காஷ்மீரில் கல்வி பயின்று 41 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்புடன் உறுதியாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அயலக தமிழர் நல வாரியம் தரப்பில், காஷ்மீர் நிலைமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரில் தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம், வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் 41 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சூழல் சீரானவுடன் மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 மற்றும் 80690 09901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மூலமாக தமிழக அரசின் உதவிகளை மாணவர்கள் பெற முடியும்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications