"வேக்சின்" முதல்வர் அழைப்பு விடுத்து 10 நாள்தான்.. மொத்தமாக திரண்டு வந்த 45 நிறுவனங்கள்.. நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் வேக்சின் தயாரிக்கவும், ஆக்சிஜன் தயாரிக்கவும் பல்வேறு மருத்துவ துறை தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ளவும் 45 நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டு அரசு உள்ளது. கொரோனா மூன்றாம் அலை கண்டிப்பாக ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன் அனைத்திற்கும் தயாராக இருக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.
வெளிநாடுகளையும், வெளிமாநிலங்களையும் நம்பிக்கொண்டு இருக்காமல் முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே சுகாதாரத்துறை தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ள தமிழ்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.

திட்டம்
இந்த நிலையில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த பெரிய நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். வேக்சின், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்து இருந்தார். அதோடு சிப்காட் சார்பாக இதற்காக முறையான அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது.

ஏற்றுக்கொண்டது
கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில், தமிழ்நாட்டு அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மொத்தம் 45 நிறுவனங்கள் வேக்சின், ஆக்சிஜன் தயாரிக்க முன் வந்து இருக்கின்றன. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், உயர் நிறுவனங்கள், மருத்துவ துறையில் அனுபவம் கொண்ட நிறுவனங்கள், வேக்சின், ஆக்சிஜன் தயாரிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்து இருக்கின்றன.

விருப்ப மனு
இவர்களின் விருப்ப மனுக்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இதில் பல நிறுவனங்கள் வேக்சின் தயாரிக்கும் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. அனுமதி பெற்று, வேக்சின் தயாரிப்பு பணிகளை தொடங்க முடியும் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. அதோடு இன்னும் பல நிறுவனங்கள் நாங்கள் ஆக்சிஜன் தயாரிக்க தயார், எங்களிடம் கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளன.

நிறுவனங்கள்
தமிழ்நாட்டு அரசு எல்லா அரசு மருத்துவமனைக்கும் வெளியிலும் ஆக்சிஜன் தயாரிப்பு மையங்களை உருவாக்கும் முடிவில் உள்ளது. ஆக்சிஜனை வெளியில் இருந்து கொண்டு வராமல், மருத்துவமனையில் இருந்தே, ஆக்சிஜனை தயாரிக்கும் பணிகளை செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இந்த பணிகளை செய்யவும் தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன.

விரைவில்
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டு அரசு உள்ளது. சுயமாக அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. பட்ஜெட்டில் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்றபடி 45 நிறுவனங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள முதல் கட்டமாக விருப்பம் தெரிவித்துள்ளன. மூன்றாம் அலை பரவல் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ள நிலையில்.. அதற்கு தமிழ்நாடு இப்போதே தயாராகி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications