கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா
சென்னை: கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 40 ஆனது.
சென்னையில் இதுவரை 2500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பில் கிட்டதட்ட 50 சதவீதம் பாதிப்பாகும்.

கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலம் ஏராளமானோருக்கு கொரோனா பரவி வருகிறது. இதுவரை 500 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பியவர்களாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

விற்பனை
இதில் பெரம்பலூர், கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அந்த வகையில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. அந்த சந்தை திருமழிசைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த இடத்தில் இன்னும் விற்பனை தொடங்கப்படவில்லை.

இன்று மட்டும் 60 பேருக்கு உறுதி
இந்த நிலையில் கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் 3 மாவட்டங்களில் 60 பேருக்கு கொரோனா உறுதியானது. பெரம்பலூரில் அதிகப்பட்சமாக மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

14 பேருக்கு உறுதி
விழுப்புரத்தில் மேலும் 14 பேருக்கு உறுதியானது. காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை நோய் பரப்பும் மையமாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications