9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி வார்டு கவுன்சிலர் தொடங்கி மாவட்ட கவுன்சிலர் வரையிலான பல்வேறு பதவியிடங்களுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

97,831 candidates have filed nominations for 9 district rural local body election

இதனிடையே செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்நிலையில் பதவி வாரியாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் விவரம் பின்வருமாறு;

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி -15,967 பேர் வேட்புமனுத் தாக்கல்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் -72,027 பேர் வேட்புமனுத் தாக்கல்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122 பேர் வேட்புமனுத் தாக்கல்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671 பேர் வேட்புமனுத் தாக்கல்

இதனிடையே வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள செப்டம்பர் 25-ம் தேதியே கடைசி நாளாகும். 9 மாவட்டங்களிலும் பரவலாக பார்க்கும் போது தேர்தலில் போட்டியிட அதிகமானோர் ஆர்வம் காட்டியிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக படித்த இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகளவில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

வரும் சனிக்கிழமை முதல் மேற்கண்ட 9 மாவட்டங்களிலும் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+