எல்லை மீறிய பெண் இன்ஸ்பெக்டர்.. தற்கொலைக்கு முயன்ற காவலர் கஜலட்சுமி.. பரபரப்பான திருப்போரூர்!
சென்னை: திருப்போரூர் பெண் இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் பெண் காவலர் கஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் கஜலட்சுமி (23) என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரின் சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டமாகும். கஜலட்சுமியின் தாய்-தந்தை இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகாத வார்தையால் திட்டினார்
திருப்போரூர் போலீஸ் பெண் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார் கஜலட்சுமி. திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, கடந்த சில மாதங்களாகவே கஜலட்சுமியை தொடர்ந்து மனரீதியாக கடும் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த பெண் காவலர் கஜலட்சுமியை, இன்ஸபெக்டர் கலைச்செல்வி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

பூச்சி மருந்து குடித்தார்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கஜலட்சுமி, பணி முடித்துவிட்டு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்து குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கலைச்செல்வியின் அராஜகம்
பெண் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தொடர்ச்சியாக உதவி ஆய்வாளர்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு கொடுப்பது, காவலர்களை மிரட்டுவது காவல் நிலையம் தன் கட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று அராஜக முறையில் செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சிலர் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரிக்கணும்
இதேபோல் கொரோனா நேரத்தில் பார் உரிமையாளர்களை கையில் வைத்து கொண்டு கூடுதலாக மது விற்பனை செய்ய உடந்தையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி எழுந்துள்ளது. எனவே இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று சக காவலர்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications