வீட்டுக்கு திடீர் விசிட் கொடுத்த விருந்தினர்.. அதிர்ந்துபோன மக்கள்.. மீட்ட தீயணைப்புத்துறை
சென்னை: சென்னை ஆவடி அருகே வீட்டில் பிடிபட்ட மலை பாம்பை வன உயிரினங்கள் பாதுகாப்பு தன்னார்வலர் மீட்டு வன உயிரியல் காப்பகத்தில் ஓப்படைத்தார்.
Recommended Video
பாம்பு என்றால் படையும் நடுங்கும், அதுவும் மலைப்பாம்பு என்றால் சொல்லவே வேண்டாம். அதன் தோற்றமே பலரை பயமுறுத்திவிடும். பாம்பு வந்தால் நம்மவர்கள் கல்லை எடுத்தோ அல்லது குச்சையை எடுத்து அடிப்பதோ இப்போது குறைந்தவிட்டது.
உண்மையில் இது வரவேற்க வேண்டிய நல்ல மாற்றம். பலரும் இப்போது பாம்பு பிடிக்க தீயணைப்பு துறை அல்லது பாம்பு பிடிப்பவர்களை உடனே அழைக்கிறார்கள். அவர்கள் லாவகமாக பாம்புகளை பிடித்து வனத்திற்குள் விட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக பாம்புகள் இப்போது தப்பிக்கின்றன.

புதரில் வந்த சத்தம்
அப்படி ஒரு நல்ல உள்ளம் தான் சென்னை ஆவடி அருகே பாம்பை பார்த்து அடித்துக் கொல்லாமல் அதை பிடித்து பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். என்ன நடந்து? இப்போது பார்ப்போம். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி கிராமத்தில் புல்லட் ராஜ் என்பவரின் வீட்டு வாசலின் புதரில் சத்தம் கேட்டதால் அருகில் சென்று பார்த்துள்ளார். பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார்.

கிண்டி வன உயிரியல் பூங்கா
அதேநேரம் பாம்பை அடித்துக்கொல்லாமல் ஊர் மக்கள் உதவியுடன் பாம்பை பிடித்த புல்லட் ராஜ் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வன உயிரினங்கள் பாதுகாப்பு தன்னார்வலர் ரீகன் இளைஞர்களிடம் இருந்து பாம்பை மீட்டார். பின்னர் கிண்டியில் உள்ள வன உயிரியல் காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது... வீட்டின் வாசலின் புதரில் பதுங்கி இருந்த மலை பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனிதனை விழுங்குமா
ஒரு மலைப் பாம்பு மனிதரை கூட விழுங்கும் என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மிக மிக அரிதாகவே நடந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் 2018ம் ஆண்டு நடந்துள்ளது. இதுபற்றி பிசிசி செய்தியும் அப்போது வெளியிட்டுள்ளது, அந்த தகவலை இப்போது பார்ப்போம். ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது அந்த நாட்டு அதிகாரிகள் 2018ம் ஆண்டு கூறினார்கள். இது நம்பமுடியாத அரிதான சம்பவம் ஆகும்.

பாம்பு வயிற்றில் பெண்
54 வயதான வா டிபா எனும் பெண், சுலவேசி மாகாணம் முனா தீவில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றபோது காணாமல் போனார்.ஒருநாள் கழித்து அப்பெண்ணின் காலணியும், அவரின் கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. 30 மீட்டர் அருகில் வீங்கிய வயிருடன் 32 அடி நீள மலைப் பாம்பு படுத்து கிடந்தது. ''காணாமல் போன பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியதாக மக்கள் சந்தேகித்தனர். அதனால் அப்பாம்பைக் கொன்றுவிட்டனர்'' என்கிறார் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹம்கா. ''பாம்பின் வயிறு அறுக்கப்பட்டது. வயிற்றின் உள்ளே அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.'' பெரும் கூட்டத்தின் முன்பு, பாம்பின் வயிற்றில் இருந்து பெண்ணின் உடல் எடுக்கப்படும் காணொளி இந்தோனீசிய சமூக வலைத்தளத்தில் 2018ம் ஆண்டு வேகமாக பரவியது.












Click it and Unblock the Notifications