ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு.. நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்!
சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிருபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video

சென்னை: மதிமுக தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிருபரை அடையாளம் தெரியாத வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். பலமுறை இவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மதிமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் சென்னை சின்னமலையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வைகோ தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் பெரிய கவனம் ஈர்த்து இருக்கிறது.
போராட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே இருக்கக்கூடிய தனியார் தேநீர் விடுதியில், தேநீர் அருந்திய வாலிபர் ஒருவர், தாம் அருந்திய தேநீருக்கு பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அச்சமயத்தில் இதனை படமெடுக்க முயன்ற மிரர் நவ் (Mirror Now) ஆங்கிலத் தொலைக்காட்சியின் நிருபர் பிரமோத்தை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் தாக்கினார்.
பிரமோத்தின் கண், முகத்தில் கடுமையாக தாக்கினார். இதனால், அதை பிரமோத்தின் கண்களில் கடுமையாக காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து சக நிருபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
மதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிருபர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருப்பது சக நிருபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications