சித்ராவின் செல்போன் ஆதாரங்கள் அழிப்பு.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை.. ஹேம்நாத்திடம் துருவும் போலீஸ்!
சென்னை: சித்ராவின் செல்போன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனி அறையில் ஹேம்நாத்திடம் போலீஸார் தொடர்ந்து 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகை சித்ரா தனது துருதுருவென்ற நடிப்பாலும், உடல் மொழியாலும் ரசிகர்களிடையே அதிகம் விரும்பப்பட்டவர். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் மேலும் புகழடைந்தார்.
அவர் கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல, கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர்.

தற்கொலை
எனினும் அவரது பிரேதப் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை தனிஅறையில் வைத்து இன்று 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதாரங்கள்
சித்ராவின் செல்போனில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் யாரை தொடர்பு கொண்டார், யாரிடமெல்லாம் பேசினார், யார் யாருக்கு மெசேஜ் அனுப்பினார் போன்ற தகவல்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆதாரங்களை மீட்க சைபர் கிரைம் போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.

போலீஸார்
அது மட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை இரவு சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் சித்ரா தங்களுடன் இருந்த வரை சகஜமாகவே இருந்தார் என்றும் அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

வற்புறுத்தல்
சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த துன்புறுத்தலே காரணம் என சொல்லப்படுகிறது. கணவர் ஹேம்நாத் , சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும் அவர் தொடர்ந்து நடிக்கக் கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

டார்ச்சர்
திருமணமானவுடன் கணவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும். எனவே நடிக்க வேண்டாம் என சித்ராவின் தாயும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாறி மாறி கொடுத்த டார்ச்சரின் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. எனினும் விசாரணைகளின் முடிவுகளில்தான் நடந்தது என்ன என்பது தெரியவரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications