Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை.. இன்றே ஆரம்பம்.. இதுதான் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம் ஆகிறது. சிறப்பு முகாம் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறைக்கு முன்னரே மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை ஆன்லைன் மூலமும் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Admission for the next academic year in government schools start today in Tamil Nadu

இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. மார்ச் மாதத்தோடு தேர்வுகள் தொடங்கும் நிலையில், அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22 லட்சம் பேர் படிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் 10- 15 லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன திட்டம்: இந்த நிலையில்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் நாட்களில் ஆன்லைன் வழி மற்றும் நேரடி வழி சேர்க்கை முறை மூலம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

1. நேரடியாக சேர்க்கை நடைபெறும் போது ஏற்படும் முறைகேடுகள் ஆன்லைனில் தவிர்க்கப்படும்.

2. மாணவ மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்ட முடியாது.

3. மாணவர்கள் எந்த பள்ளியில் அதிகம் சேருகிறார்கள், எங்கே பள்ளிகளில் தேவை அதிகம் உள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.

4. போலி விண்ணப்பங்கள் பதிவு செய்வதை தவிர்க்க முடியும்.

இதற்காக இந்த வருடம் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நேரில் வரும் குடும்பங்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் அட்மிஷன் செய்யப்படும்.

ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல்போன் எண் ஆகியவை மூலம் ஆன்லைன் சேர்க்கை செய்யப்படும். அதோடு இவர்களின் ஜாதி தொடங்கி இடஒதுக்கீடு வரை அனைத்தையும் பள்ளி கல்வித்துறை எளிதாக கண்காணிக்க இது வசதியாக மாறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+