லோக் சபா தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறுவது தொடக்கம்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுவை பெறும் நிகழ்வு தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவது குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸிட், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக கூட்டணி அமைக்கிறது. பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.
பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வருகிறது. இந்நிலையில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து இன்று முதல் அதிமுக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
விருப்ப மனுக்களை பெறுவது தொடர்பான நிகழ்வு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இது 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications