Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவு.. வேகமாக வந்து காரில் ஏறிய எடப்பாடி.. ‘கிளைமாக்ஸ்’.. என்ன முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சற்று முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 எம்.எல்.ஏக்கள் கூட்டம்

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், இதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக அரசு அமைந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதேசமயம், தன்னை மாற்றக்கூடாது என ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். இதனால், சபாநாயகர் யாருக்கு சாதகமான முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி முக்கிய ஆலோசனை

எடப்பாடி முக்கிய ஆலோசனை

ஒருவேளை சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் இருக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வார். இது இருவருக்குமே சங்கடமான சூழல் ஏற்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காத பட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தனி குழுவாக செயல்பட்டு வரும் நிலையில் மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே காரில் ஏறி கிளம்பினார்.

என்ன ஆலோசனை?

என்ன ஆலோசனை?

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு + 51வது ஆண்டு தொடக்கத்தை சிறப்பாக கொண்டாடுவது, அதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+