எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவு.. வேகமாக வந்து காரில் ஏறிய எடப்பாடி.. ‘கிளைமாக்ஸ்’.. என்ன முடிவு?
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சற்று முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், இதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக அரசு அமைந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதேசமயம், தன்னை மாற்றக்கூடாது என ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். இதனால், சபாநாயகர் யாருக்கு சாதகமான முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி முக்கிய ஆலோசனை
ஒருவேளை சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் இருக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வார். இது இருவருக்குமே சங்கடமான சூழல் ஏற்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காத பட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தனி குழுவாக செயல்பட்டு வரும் நிலையில் மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே காரில் ஏறி கிளம்பினார்.

என்ன ஆலோசனை?
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு + 51வது ஆண்டு தொடக்கத்தை சிறப்பாக கொண்டாடுவது, அதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications