17 நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் முதல்வர்...! அதிகாரிகள் பர பர
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17 நாட்களுக்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்ததால் தேங்கிக் கிடந்த கோப்புகளை அதிகாரிகள் தூசு தட்டி எடுக்கத் தொடங்கினர்.
கடந்த மாதம் 28-ம் தேதி வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்.10-ம் தேதி அதிகாலை தமிழகம் திரும்பினார். அவர் வெளிநாடுகளுக்கு புறப்படுவதற்கு முன், கடைசியாக ஆகஸ்ட் 26-ம் தேதி கோட்டைக்கு சென்றார். அப்போது அனைத்து துறை உயர் அதிகாரிகளை அழைத்த அவர், அரசு நிர்வாகத்தில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை காலை சென்னை வந்த முதலமைச்சர், கோவை, சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுவிட்டார். வெளிமாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு புதன்கிழமை சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகம் செல்லவில்லை. முகாம் அலுவலகத்தில் இருந்து கோப்புகளை பார்த்தார்.
வெளிநாடு பயணம் சென்று திரும்பியதால் தன்னை சந்திக்க நேரம் கேட்டவர்களுக்கு நேரம் ஒதுக்கி நேற்று அவர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வரை முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துக்கூறினர்.
முதலமைச்சர் இல்லாததால் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பெரிய சுறுசுறுப்பு இல்லாத நிலையே நேற்று வரை காணப்பட்டது. இதனிடையே இன்று முதல்வர் கோட்டைக்கு சென்றதால் அதிகாரிகள் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கினர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications