அடுத்த ‛‛மன்னிப்பு’’.. ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச ரசிகரிடம் கேட்ட இந்திய ரசிகர்கள்.. என்ன காரணம்?
சென்னை: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச அணியின் தீவிர ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 14ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 191 ரன்களை இந்தியா 30.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரிஸ்வான் அவுட்ஆகி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். அப்போது சில இந்திய ரசிகர்கள் அவரை பார்த்து ‛ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்' என கூச்சலிட்டனர். இது விவாதத்தை கிளப்பியது.
இதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ரிஸ்வானிடம் ‛Sorry' கேட்டு எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட்டானது. இந்நிலையில் தான் தற்போது வங்கதேச அணியின் ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அதாவது சில நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின்போது வங்கதேச ரசிகர் சோயிப் அலி புலி உடை அணிந்து கையில் புலி பொம்மையை வைத்திருந்தார்.

இந்த வேளையில் இந்திய ரசிகர்கள் சிலர் அவர் வைத்திருந்த புலியை தூக்கி வீசி, சேதப்படுத்தினர். மேலும் பொம்மை புலியின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர். இதனை பார்த்து சிலர் சிரித்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சோயிப் அலியும் இந்திய ரசிகர்களின் செயல் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி அவர், ‛‛இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதுபோன்ற சம்பவம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். ஆனால் இந்திய ரசிகர்களின் தற்போதைய செயல் வருத்தமாக உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்தபோதே அங்கிருந்த சில இந்திய ரசிகர்கள் அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர்.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications