Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ‛‛மன்னிப்பு’’.. ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச ரசிகரிடம் கேட்ட இந்திய ரசிகர்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச அணியின் தீவிர ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 14ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 191 ரன்களை இந்தியா 30.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது.

After Rizwan Indian fans apologise to Bangladesh fan shoaib Ali who harrassed in pune

இந்த போட்டியின்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரிஸ்வான் அவுட்ஆகி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். அப்போது சில இந்திய ரசிகர்கள் அவரை பார்த்து ‛ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்' என கூச்சலிட்டனர். இது விவாதத்தை கிளப்பியது.

இதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ரிஸ்வானிடம் ‛Sorry' கேட்டு எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட்டானது. இந்நிலையில் தான் தற்போது வங்கதேச அணியின் ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அதாவது சில நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின்போது வங்கதேச ரசிகர் சோயிப் அலி புலி உடை அணிந்து கையில் புலி பொம்மையை வைத்திருந்தார்.

After Rizwan Indian fans apologise to Bangladesh fan shoaib Ali who harrassed in pune

இந்த வேளையில் இந்திய ரசிகர்கள் சிலர் அவர் வைத்திருந்த புலியை தூக்கி வீசி, சேதப்படுத்தினர். மேலும் பொம்மை புலியின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர். இதனை பார்த்து சிலர் சிரித்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சோயிப் அலியும் இந்திய ரசிகர்களின் செயல் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி அவர், ‛‛இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதுபோன்ற சம்பவம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். ஆனால் இந்திய ரசிகர்களின் தற்போதைய செயல் வருத்தமாக உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்தபோதே அங்கிருந்த சில இந்திய ரசிகர்கள் அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+