அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ் மகன் உசேன்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் எனவும் பிரார்தித்து தர்ஹாகளுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று வருகிறார் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்.
இதுவரை அதிமுக அவைத் தலைவராக இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை எடப்பாடிக்காக தமிழ் மகன் உசேன் செய்து வருகிறார்.
ஏர்வாடி, முத்துப்பேட்டை, கோவளம், ஆற்றங்கரை என தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து தர்ஹாக்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டார் தமிழ் மகன் உசேன்.

வக்பு வாரியத் தலைவர்
அதிமுகவில் எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரான தமிழ் மகன் உசேன் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். ஜெயலலிதாவை பார்க்க ஆட்டோவில் சென்ற இவர், அடுத்த நாளே அரசுப் பதவியில் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு அரசு வாகனத்தில் பவனி வந்தவர். கட்சி மீதும் எம்.ஜி.ஆர் மீதும் கொண்ட விசுவாசம் காரணமாக அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அதில் பயணித்து வரும் இவர் இப்போது அக்கட்சியின் அவைத்தலைவராக உள்ளார்.

சிறப்பு துஆ
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்காக தமிழகம் முழுவதும் உள்ள் தர்ஹாக்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று வருகிறார். மதுரை கோரிப்பாளையம், ஏர்வாடி, முத்துப்பேட்டை, கோவளம், ஆற்றங்கரை என தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து தர்ஹாக்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்ட இவர், செல்லும் இடங்களிலெல்லாம் எடப்பாடிக்காக சிறப்பு துஆ செய்து தனது விசுவாசத்தை தலைமைக்கு தெரியப்படுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏன் இந்த பாசம்?
எடப்பாடி பழனிசாமிக்காக இந்தளவு விழுந்து விழுந்து இவர் பிரார்தனை செய்வதற்கான காரணம் பற்றி நாம் விசாரித்ததில், அதிமுக அவைத் தலைவராக தற்காலிக நியமனத்தில் இருந்த இவரை எடப்பாடி தான் முறைப்படி அவைத் தலைவராக்க நடவடிக்கை எடுத்தார் என்பது தானாம். இதனால் தான் தனது விசுவாசத்தை இது போன்ற நிகழ்வுகள் மூலம் உணர்த்தி வருகிறாராம். இதனிடையே தர்ஹா வாசல்களில் நின்று கொண்டு இவர் கொடுக்கும் பேட்டிகள் தான் சற்று ஓவர் டோஸாக இருக்கிறது.

நடத்துநர்
அரசுப் பேருந்து நடத்துநராக இருந்து எம்.ஜி.ஆருக்காக அரசுப் பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவர் தமிழ் மகன் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழ்ங்கப்பட்டு ஒரே வாரத்தில் அதை திரும்பபெற்று வேறொருவரை அங்கு வேட்பாளராக்கினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு அரசியலில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ. என எந்தப் பதவியிலும் தமிழ் மகன் உசேன் இருந்ததில்லை எனக் குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications