போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் இன்று மார்ச் 13 ஆம் தேதி [வெள்ளிக்கிழமை] அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மார்ச் 13 ஆம் தேதியான இன்று (வெள்ளி) பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் எம்.அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications