பல சந்திப்புகள்.. வந்த வேலை முடிந்தது.. டெல்லி புறப்பட்டு சென்றார் அமித்ஷா!
சென்னை: தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்ப ஏராளமான பாஜகவினர் திரளாக பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோரும் நேரில் சென்று அமித்ஷாவை வழி அனுப்பி வைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த தமிழக அரசு விழாவில் கலந்துகொண்டார்.
தேர்கண்டிகை நீர்தேக்கத்தை திறந்து வைத்தார்., கரூர் அருகே கதவணை திட்டம். மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணிகள், கோவை அவிநாசி உயர்மட்ட சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்தர ஓட்டலில் தங்கினார்.

குருமூர்த்தி சந்திப்பு
அங்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இதேபோல் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோரை சந்தித்தும் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா பங்கேற்பு
அத்துடன் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான கூட்டமும் நடந்தது. இந்த சந்திப்புகளில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷா பாஜக நிர்வாகிகளிடம் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கடினமாக உழையுங்கள் என்று வலியுறுத்தினார்.

அதிமுக ஒப்புக்கொள்ளும்
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடனான ஆலோசனையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். அத்துடன் நிறைய தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுத்து வருகிறார். எனவே முன்பைவிட தொகுதிகள் அதிகமாக ஒதுக்க அதிமுக ஒப்புக்கொள்ளும் என கூறப்படுகிறது

வழிஅனுப்பி வைத்த ஓபிஎஸ்
இந்நிலையில் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு அமித் ஷா சென்றார். அங்கிருந்து 10.45 மணி அளவில் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரை பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோரும் நேரில் சென்று அமித்ஷாவை வழி அனுப்பி வைத்தனர். பாஜக தொண்டர்கள் திரளாக வந்தனர். அதிமுக தொண்டர்கள் வரவில்லை.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications