பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டும் நியமிக்கும் முடிவை எடுக்கவில்லை.. அமைச்சர் அன்பில் விளக்கம்
சென்னை: மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளையே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது. இந்த செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார், இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, இது தொடர்பாக வந்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் முன்பு அரைநிர்வாணமாக வந்ததை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குமுறைப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குழு
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றுதான் வகுப்பெடுக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

நீட் தேர்வு
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நீட் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. அந்த தேர்வை நடத்த விடமாட்டோம்.

12 ஆம் வகுப்பு மதிப்பெண்
மீறி நடத்தினால் போராடுவோம். நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த அனுமதிக்க மாட்டோம். நீட் தேர்வு கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; 12ம் வகுப்பு மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

பாலியல் சீண்டல்
அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் இருக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

அன்பில் மகேஷ்
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளையே மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது. இந்த செய்தி உண்மை கிடையாது. இந்த செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எடுக்கவில்லை
மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளையே மட்டுமே நியமனம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, இது தொடர்பாக வந்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம், தமிழக அரசு இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications