மத்திய கைலாஷ் மேம்பாலம்! உலகிலேயே கான்கிரீட் சாலை மீது தார் சாலை போட்ட ஒரே அரசு திமுகதான்! அன்புமணி
சென்னை: மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன என நான் குற்றம்சாட்டியதை அடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்துள்ளன என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது. உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.

எல் வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வரை அதை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க வரும் தேவதையாகப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்தப் பாலம் திறக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலிருந்து அதை உயிரைப் பறிக்க வந்த எமனாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு மத்திய கைலாஷ் பாலத்தை தரமற்றதாக திமுக அரசு கட்டியிருந்தது. அனைத்திலும் ஊழல் செய்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் அடங்காத பேராசை தான் இதற்குக் காரணம் ஆகும்.
மத்திய கைலாஷ் பாலம் தரமற்று இருப்பதற்கு காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து வல்லுனர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை கடந்த 3-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். திமுக அரசுக்கு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், அதைத் தாண்டி நேர்மையான அரசாக இருந்திருந்தால் பாலத்தின் பலவீனத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து சரி செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும்; இன்னொருபக்கம் பாலம் தரமற்று கட்டப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதையெல்லாம் செய்யாமல் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைத்திருப்பதன் மூலம், பாலம் தரமற்று அமைக்கப்பட்டிருப்பதையும், அதன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கும் திமுக அரசு, இன்னொருபக்கம் ஊழலை தார்ப்பூசி மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறது. திமுக அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சாலைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விதிகளின்படி, அதிக போக்குவரத்து இல்லாத கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேற்பரப்பில் வேண்டுமானால் தார் சாலை அமைக்கலாம்; நகர்ப்புறங்களில் அவ்வாறு செய்யக்கூடாது. ஆனால், இதிலும் விதிகளை மீறி தார்ச்சாலை அமைத்திருக்கிறது திமுக அரசு. விதி மீறலுக்கு அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர்.
எல் வடிவ மேம்பாலம் பலவீனமாக இருப்பதற்காக காரணங்களில் முதன்மையானது,''அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கக் கூடிய பாலத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் போதிய வலுவற்றவையாக இருக்கக் கூடும். அதிக வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்படாததும் தான்" என்று கட்டுமான வல்லுனர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டால் பாலத்தின் எடை அதிகரிக்கும். அதனால் பாலம் விரைவாகவே வலுவிழந்து விடும். இவை அனைத்தும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் இப்போது பழியிலிருந்து தப்புவதற்காகவே இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்துள்ளனர். ஆட்சியாளர்கள் செய்துள்ள இந்த ஏற்பாடும் பயன் தராது. இன்னும் சில வாரங்களில் பாலம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.
மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.
1. எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; பாலம் கட்டியதற்கான ஒப்பந்தத் தொகையில் ஏதேனும் நிலுவை இருந்தால் அதை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
3. மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப் பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications