ஐ.நா. மனித உரிமை சபை- இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி.யும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் உள்ள நாடுகள் போர்க்குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு இதுவரை வெளிப்படையாக எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

இந்திய அரசானது சர்வதேச தீர்மானத்தை ஆதரித்தே வாக்களிக்க வேண்டும் என்பது தமிழக கட்சிகளின் நிலைப்பாடு. இதனை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அன்புமணி ராமதாஸும் கடிதம் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications