அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணைமுதல்வர் மரியாதை - கமல், டிடிவி தினகரன் ட்விட்டர் அஞ்சலி
பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நாளில் அதிமுக, திமுக சார்பில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2021
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தென்னாட்டு காந்தி, ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற இலக்கணம் வகுத்து, எளிய மக்களைப் பற்றியே சிந்தித்த தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று என்று பதிவிட்டுள்ளார்.
தென்னாட்டு காந்தி, ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற இலக்கணம் வகுத்து, எளிய மக்களைப் பற்றியே சிந்தித்த தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று! 1/2 #CNAnnadurai pic.twitter.com/5Sgcbz1wGK
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 3, 2021
பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம்" என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
“பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம்! 2/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 3, 2021
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் திமுகவினர் அமைதி பேரணி நடத்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications