Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்பதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

கமலாலயம் வந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்

கமலாலயம் வந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் இரு அணிகளும் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற முனைப்பு காட்டி வருகின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் நேரடியாக சென்று தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.

அதிமுக - பாஜக சந்திப்பு

அதிமுக - பாஜக சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் ஆதரவு கோரினர். அப்போது பாஜக தரப்பில் அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சிபி ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் இருந்தனர்.

 அண்ணாமலை அறிவிப்பார்

அண்ணாமலை அறிவிப்பார்

இந்த ஆலோசனைக்கு பின் கமலாலயத்தில் இருந்து வெளிவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

பாஜக நிலைப்பாடு

பாஜக நிலைப்பாடு

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இருப்பினும், இடைத்தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து கூட்டணி தர்மத்தின்படி பாஜக முடிவு எடுக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் அதிமுகவில் இரு அணிகளும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+