பூர்ணிமா அன்று பார்ஃமுக்கு வந்த அன்னபூரணி! கை ஏன் இப்படி நடுங்குது.. புல்லரித்துப் போன பக்த கோடிகள்!
சென்னை : தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கி தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் அருள் வந்து விட்டதாக சிஷ்யர்கள் கூட்டத்தை கூட்டி குரு பூர்ணிமா நாளன்று அவர் செய்த அருள் வாக்கு லீலைகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கேலிக்குள்ளாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

திடீர் சர்ச்சை
உண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியாக சொல்லப்போனால் புத்தாண்டு தினத்தன்று செங்கல்பட்டு பகுதியில் ஆதிபராசக்தி அம்மாவின் திவ்ய தரிசன நிகழ்ச்சி நடைபெறும் என விளம்பரங்கள் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் இருந்த சாமியாரின் முகத்தை பார்த்த நெட்டிசன்கள் இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என மண்டையை குழப்பிக் கொண்டனர் மேலும் நன்கு தெரிந்த முகம் போல இருந்த நிலையில் நீங்க யார் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என தேடத் தொடங்கினர்.

சாமியார் அவதாரம்
அப்போதுதான் பாட்ஷா படத்தில் வரும் போது போல ஒரு ஃப்ளாஷ் பேக் வந்தது. வேறு யாருமில்லை அரசு என்பவருக்கும் அன்னபூரணி என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தொடர்பாக பிரபல தனியா தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் என்பதும் அதன் பிறகு சில நாட்கள் மாயமாகி இருந்தவர் திடீரென சாமியார் அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு அருள் வாக்கு தருவதாக கூறி கல்லா கட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

போலி பெண் சாமியார்
இதையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட திருமண மண்டபத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டுள்ள அவர் தற்போது மடம் ஒன்றை ஆரம்பித்து சில கோஸ்டிகளை அமர வைத்து தனக்குத்தானே பூஜை புனஸ்காரங்கள் செய்து facebook லைவில் வேறு அடிக்கடி வந்து அருள் சொல்லுகிறார். மேலும் தொலைபேசியில் தீட்சை பெற்றால் ஐஏஎஸ் கலெக்டர் ஆகலாம், அடுத்த நாளே அமைச்சராகலாம் என்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்னபூரணி அரசு அம்மா
அவரையும் நம்பி ஒரு கூட்டம் சில்லறைகளை சிதற விட நன்கு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா இந்நிலையில் குரு பௌர்ணமி அன்று நடைபெற்ற அம்மாவின் திவ்ய தரிசன நிகழ்ச்சி என்று facebook பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிரபலமான ஓம் மாகாளி நீ வா தாயி என்ற பாடலின் பின்னணியில் பூ தூவ கற்பூர ஆரத்தி உடன் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறார் குடிசை அடியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அன்னபூரணி.

நெட்டிசன்கள் கமெண்ட்
சிறிது நேரத்தில் பக்தர்களின் பூஜையால் அம்மனுக்கு அருள் வர ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது கதையாக கைகள் பயங்கரமாக வைப்ரேஷன் ஆகியது. பின்னர் தான் தெரிந்தது அம்மாவுக்கு அருள் கூடி பக்தர்களுக்கு பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார் என்பது. இதையெல்லாம் விட ஒரு படி மேலேயே போய் சில பக்த கோடிகள் அம்மாவுக்கு பாத பூஜை செய்ய அவரது காலை கழுவி மலர்களால் மரியாதை செய்தனர். இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications