தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்! இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்! யார் அவர்கள்?
சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று ஒரு வழியாக தேர்வுக் குழுவால் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு;

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (20-12-2022) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கலந்து கொண்டார். இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் V.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ராஜ இளங்கோவும், கண்ணதாசனும் நியமனம் ஆகியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் இப்போது 2 புதிய உறுபினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் மீதமிருக்கும் காலிப்பணியிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications