தனியாக இருக்கும் தாய்க்கு உதவி கேட்ட ராணுவ வீரர்.. உடனே முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் ரெஸ்பான்ஸ்
சென்னை: தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்து உதவி தேவை என்று தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் உங்கள் தாய்க்கு அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். ரவிக்குமாரின் தாயார் சுப்பிரமணியம்மாள் வயது 89. இவர் கிருஷ்ணா புரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உதவி உள்பட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் சுப்பிரமணியம்மாள் தவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர் ரவிக்குமார், தனது தயாருக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்தார்.
அந்த டுவிட் பதில் "ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை" என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன்.
கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராணுவ வீரர் ரவிக்குமார், நன்றி ஐயா, தாங்கள் இருக்கும் தைரியத்தில் நாட்டுக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம். தங்கள் பணி சிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications