விடாதீங்க.. ஆக்ஷனில் குதித்த டீம்.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த முக்கிய உத்தரவு..!
தமிழக காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு என்ன
சென்னை: குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் தனியார் லாட்ஜ்களில் சோதனை நடத்தி பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆவண ஆய்வு செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
உடனடியாக சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதாகினர்.. இந்த வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பாக பணி புரிந்த காவலர்களை அங்கீகரிக்கும் விதமாக 15 பேருக்கு சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

34 பேர்
அதேபோல, கார் வெடித்த சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு 34 பேருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர். எனினும், இந்த வெடிவிபத்து சம்பவம் அரசியல் அதிர்வுகளை உண்டுபண்ணி வருகிறது.. மாநில அரசுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகளை கேட்டு, இது தொடர்பான விமர்சனத்தையும் முன்வைத்து வருகிறது.. காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, தற்போது இதே காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டியும் வருகிறார்.

உச்சக்கட்ட அலர்ட்
எனினும், கோவை வெடிவிபத்து சம்பவத்துக்கு பிறகு தமிழக காவல்துறை உச்சக்கட்ட அலர்ட் ஆகியுள்ளது.. அந்தவகையில், போலீசாரின் மொத்த கவனமும் சமூகவிரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பியிருக்கிறது.. மற்றொருபக்கம் உளவுத்துறையும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.. மேலும், அன்றாட பணிகளில் மாற்றம் செய்வது குறித்தும் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்..

லாட்ஜ்கள்
இதைதவிர, மாநிலம் முழுவதும் மர்மநபர்களின் நடமாட்டம் குற்றத்தடுப்பு தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடன் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அந்த ஆலோசனையில் ஒருசில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாம்.. குறிப்பாக, குற்றத்தடுப்பின் ஒரு அங்கமாக, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் லாட்ஜ்களிலும் போலீசார் தொடர் சோதனை நடத்த முடிவாகி உள்ளது..

டவுட் நபர்கள்
தினமும் இந்த சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அந்த சோதனையில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளாராம்.. தனியார் லாட்ஜ்களில் சோதனை மேற்கொள்ளும்போது, அங்கு வருகை பதிவேடு, தங்கு நபர்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? சந்தேக நபர்கள் தங்கியிருந்தால் அவர்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் தடையின்றி இயங்குகிறதா என்பதையெல்லாம் உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications