தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அவரின் சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அண்ணாமலை கோவை மாவட்டத்தில் கவனம் செலுத்தினார். அவரின் மனைவி அகிலாவின் சொந்த ஊர் கோவை தான். கோவைக்கு வரும்போது அவரின் மாமனார் வீட்டில் தங்கி வந்தார்.

அண்ணாமலை அதிருப்தி
பிறகு காளப்பட்டி அருகே அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெறாவிடினும் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். கோவையை தங்களின் கோட்டையாக வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
2026 தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதியானதால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தார்.
தேர்தலில் போட்டியில்லை
தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்தும் அவர் விலகியிருந்தார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் சொல்லப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவதாக கூறப்பட்டது. நேற்று அவர் பியூஷ் கோயலை சந்தித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதற்காக யாரிடமும் நான் சீட் கேட்கவில்லை. தொண்டனாக என்னுடைய வேலையை நான் செய்கிறேன். கட்சி தலைமை கூறினால் பார்க்கலாம் என்றார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. பரபரப்பான நிலையில் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பு கடிதம்
இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் கட்சி தலைமையான டெல்லிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். அதில், "தனிப்பட்ட காரணங்கள், குடும்ப சூழல் காரணமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளாராம். இது பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் கடிதத்திற்கு பாஜக தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications