பஜனைகளை தடுக்க அரசு சதி! சென்னை அயோத்தியா மண்டபம் கைப்பற்றப்பட்டதால் கொந்தளித்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராம நவமி அன்று பெரும்பாண்மை இந்து மக்களை பட்டத்தில் ஆழ்த்தும் வகையில் அயோத்தியா மண்டபத்தை திமுக அரசு கைப்பற்றி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள அயோத்திய மண்டபத்தை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இன்று அதை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்த சென்றனர்.

அப்போது ஏராளமான பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்ய மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விருகம்பாக்கம் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கலாச்சாரத்தை குழிதோண்ட புதைப்பதா?

கலாச்சாரத்தை குழிதோண்ட புதைப்பதா?

இந்த நிலையில் அயோத்திய மண்டபத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "தமிழகத்தில் இந்து சமயத்தின் அறநிலையம் என்பது நம் பண்டைத் தமிழரின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வழிமுறைகளையும் பேணிக் காப்பதற்கா அல்லது குழிதோண்டி புதைப்பதா என்ற பெரும் கேள்வி. தற்போது எழுந்துள்ளது.

பஜனைகளை தடுக்க திமுக அரசு சதி

பஜனைகளை தடுக்க திமுக அரசு சதி

இன்று மேற்கு மாம்பலத்தில் உள்ள புகழ்பெற்ற பஜனை மற்றும் பிரசங்க மண்டபம் ஆன அயோத்திய மண்டபத்தை காவல்துறையினரின் கடுமையான அடக்கு முறையை செயல்படுத்தி கைப்பற்றி பூட்டு போட்டுள்ளனர். பகவான் ராமரின் பெயரால், பஜனைகள் நடைபெறும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றி இனி அங்கே சத்சங்கங்களும், திருக்கூட்டங்களும், பஜனைகளும் நடைபெறாமல் தடுப்பதில் திமுக அரசு அதிக அக்கறை காட்டி காவல் துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது, கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்களின் மனத்தை எல்லாம் புண்படுத்த வேண்டும்.

 பெரும்பான்மை மக்களை பதட்டத்தில் ஆழ்த்த திட்டம்

பெரும்பான்மை மக்களை பதட்டத்தில் ஆழ்த்த திட்டம்

பெரும்பான்மைச் சமுதாய மக்களை பெரும் பதட்டத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற மனோபாவத்தில் ராமநவமி அன்று, இராமர் புகழ்பாடும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியிருக்கிறது திமுக அரசு. இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் பழந்தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளை கொச்சைப் படுத்துவதை, தொடர்ந்து செய்து வருகின்றனர். கோவில்களைக் கடந்து பஜனைகள், சத்சங்கங்கள், திருக்கூட்டங்கள் மூலம் பக்தியை பரப்பும் மண்டபங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

சட்டப்படி இது தவறு

சட்டப்படி இது தவறு

இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கடவுளரின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் இடங்களில் மட்டும்தான் அறநிலைத்துறை சட்டம் செல்லுபடியாகும். அவற்றைக் கையகப்படுத்த முடியும். அயோத்தியா மண்டபத்தில் இறைவன் திருமேனி சிலை கூட இருக்கவில்லை. ஆகவே அரசின் இந்த நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது." எனக்குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+