Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்.. தலைமை செயலகத்தில் குவிந்த பாஜக நிர்வாகிகள்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பாக உள்துறை செயலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக பிரமுகர்கள், பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

 உள்துறை செயலரிடம் கோரிக்கை

உள்துறை செயலரிடம் கோரிக்கை

இந்த நிலையில் பாஜக சார்பில் டிஜிபி மற்றும் உள்துறை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமீப காலமாக தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது. பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.

 பாதுகாப்பு வழங்க மனு

பாதுகாப்பு வழங்க மனு

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.

 நாராயணன் திருப்பதி பேட்டி

நாராயணன் திருப்பதி பேட்டி

இதனைத்தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த 2 நாட்களாக எவ்வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம்.

 கடும் நடவடிக்கை தேவை

கடும் நடவடிக்கை தேவை

தற்போது உள்துறை செயலரை சந்தித்து பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதேபோல் அமைதி பூங்காவான தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு என்பது அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீய சக்திகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+