தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்.. தலைமை செயலகத்தில் குவிந்த பாஜக நிர்வாகிகள்.. பின்னணி!
சென்னை: பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பாக உள்துறை செயலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக பிரமுகர்கள், பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

உள்துறை செயலரிடம் கோரிக்கை
இந்த நிலையில் பாஜக சார்பில் டிஜிபி மற்றும் உள்துறை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமீப காலமாக தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது. பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.

பாதுகாப்பு வழங்க மனு
பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.

நாராயணன் திருப்பதி பேட்டி
இதனைத்தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த 2 நாட்களாக எவ்வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம்.

கடும் நடவடிக்கை தேவை
தற்போது உள்துறை செயலரை சந்தித்து பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதேபோல் அமைதி பூங்காவான தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு என்பது அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீய சக்திகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications