பேரறிவாளனை விடுதலை செய்ய கூடாது- இலங்கைக்கு நாடு கடத்தனுமாம்.. ட்வீட் போட்டு டோஸ் வாங்கும் சு.சுவாமி
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அவரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவதுடன் ராஜீவ் காந்தி படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள தொடர்பு குறித்து ஜெயின் கமிஷன் எழுப்பிய சந்தேகங்களையும் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் தமிழக ஆளுநரோ இதனை ஏற்க மறுத்து ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

பேரறிவாளன் விடுதலையாகிறார்
இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை, நன்னடத்தை உள்ளிட்டவைகள் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு கெடு
ஆனால் பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் வரும் 10-ந் தேதிக்குள் முடிவெடுத்தாக வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிடும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மாநில அரசின் முடிவுகளை தடுத்து வைக்கும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

சு.சுவாமி சர்ச்சை ட்வீட்
இந்த பின்னணியில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில், விடுதலைப் புலிகளின் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் கருணை அளித்தால் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும். 1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பேரறிவாளன் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மேலும் ஒரு கருணை காட்டி பேரறிவாளனை விடுதலை செய்யப் போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நெட்டிசன்கள் கோபம்
சுப்பிரமணியன் சுவாமி இன்று காலை இந்த பதிவை போட்டது முதலே கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ராஜீவ் கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் ஆணையம், சுப்பிரமணியன் சுவாமி மீது சந்தேகம் எழுப்பியிருக்கிறது; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கும் சு.சுவாமிக்குமான தொடர்பு குறித்து கேள்வி கேட்டுள்ளது என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் பேரறிவாளன் இலங்கையை சேர்ந்தவர் அல்ல என்பதை ஏன் சுப்பிரமணியன் சுவாமி தெரிந்து கொள்ளவில்லை எனவும் நெட்டிசன்கள் வறுக்கின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications