தமிழ்நாடு லாக்டவுன்.. அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் நிறுத்த வாய்ப்பு?.. விரைவில் அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருபக்கம் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது

ஊரடங்கு அமல்
கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான், தமிழக அரசு ஊரடங்கை மீண்டும் கையில் எடுத்தது. கடந்த 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு ஊரடங்கில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்கள்
இரவு ஊரடங்கின்போது மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் பொது போக்குவரத்து இயங்குவதில்லை. இப்படி ஊரடங்கு போடப்பட்ட போதிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கேரளாவில் உச்சத்தில் கொரோனா
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆந்திராவில் தினமும் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு பதிவாகி வருகிறது. இதேபோல் கர்நாடகாவிலும் 20,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கும் அரசு, தனியார் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை இல்லை
பிற மாநிலங்களில் பேருந்துகளிலும் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. கேரளா மாநில எல்லையான வாளையார், களியக்காவிளை, தென்காசி ஆகிய இடங்களில் சோதனை தீவிரமாக உள்ளது. கர்நாடக எல்லை பகுதிகளிலும் சோதனை மிக தீவிரமாக உள்ளது. ஆனாலும் பேருந்துகளில் வருபவர்கள் அனைவரும் 2 டோஸ் போட்டு இருந்தால் உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதில்லை.

பேருந்து சேவை நிறுத்தம்?
இதன் காரணமாக கேரளாவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் கொரோனா தொற்று தமிழகத்துக்குள் மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு விரைவில் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை சிறிது காலம் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் வரும் அனைவரையும் சோதனை செய்வது இயலாத காரியம் என்பதால் மாநிலங்களுக்கு இடையே பொது பேருந்துகளை நிறுத்துவதே சரியான முடிவாக இருக்கும் என்று அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications