சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் உடனடியாக நிறுத்தம்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தாலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும் பிற்பகல் 2.30 மணி உடன் உடனடியாக நிறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பின்படி இன்று மாலை 6 மணி முதல் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நீண்ட தூரம் செல்லும் பேருந்து சேவைகள் அனைத்தும் சென்னையில் இன்று மதியம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்பட வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூட்டமாக குவிவதை தடுக்கவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் அரசு உடனடியாக பேருந்து சேவைகளை நிறுத்தி உள்ளது.
இதனால் சென்னைவாசிகள் பலர் சொந்த ஊருக்கு போகலாம் என்று எண்ணி பேருந்து நிலையங்களுக்கு சென்ற நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 144 தடை உத்தரவு பிறப்பித்த ஒரு மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டுக்கு படை எடுத்ததால் பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணித்து சொந்த ஊருக்கு சென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications