ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய முடியவில்லையா?.. இனி கவலை வேண்டாம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவு செய்வதில் சிரமம் இருப்பதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர பொங்கல் பண்டிகை காலத்திலும் சிறப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன.சமீபத்தில் கூட மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. இது தவிர ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகள்
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பையும் ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தற்போது ஜனவரி மாதத்திற்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கைரேகைப் பதிவு செய்ய முடியவில்லை
ஆனால் பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரும் ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகைப் பதிவு, இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில் சிரமம் இருந்தது.

இனி கவலை வேண்டாம்
கைரேகை பதிவு செய்ய முடியாததால் பலர் பொருட்கள் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பி செல்கின்றனர்
இதனால் பழைய முறைப்படி பொருட்களை வினியோகம் செய்யவும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதாவது ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், ரேகையை பதிவு செய்ய முடியாவிட்டாலும் பொருட்கள் வாங்கலாம்.
Recommended Video

அரசின் உத்தரவு இதுதான்
ரேஷன் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்தும், பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications