ரூ.1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. ஆன்லைனில் விண்ணப்பத்தை பெற முடியுமா?
சென்னை: ரூ. 1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிரந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் இன்றிலிருந்து வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் நேற்றில் இருந்து வழங்கப்படுகின்றன.

மொத்தமாக 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் மொத்தம் 1,417 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த டோக்கன்களை நேரில் சென்று வாங்க வேண்டியது இல்லை. ரேஷன் கார்ட் அடிப்படையில் வீடு தேடி வந்து டோக்கன், விண்ணப்பம் வழங்கப்படும். உங்களுக்கு ஒருவேளை விண்ணப்பம் வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் முகாமில் சென்று விண்ணப்பங்களை வாங்கலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து வீடுகளுக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.
சந்தேகம்: ரூ. 1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ரேஷன் கடை இருக்கும் பகுதியில் நீங்கள் இல்லை.
நீங்கள் வேறு ஊரில் உள்ளீர்கள் என்றால் எப்படி டோக்கன் பெறுவது என்ற குழப்பம் இருக்கும். இதற்காக ஆன்லைனில் ரொக்கம் தரப்படுமா? அப்ளிகேஷன் தரப்படுமா என்று கேள்வி இருக்கும். இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு ஆன்லைனில் அப்ளிகேஷன் பெற முடியாது. நீங்கள் டோக்கன் தரும் போது வீட்டில் இல்லாத பட்சத்தில், உங்கள் ரேஷன் கடையில் சென்று ரேஷன் கார்டை காட்டி டோக்கன், அப்ளிகேஷன் வாங்க முடியும்.
வேறு ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளில் இதை வாங்க முடியும். உங்கள் ரேஷன் பதிவு செய்யப்பட்டு உள்ள கடைகளில் மட்டுமே இதை வாங்க முடியும். ஆன்லைனில் வழங்கினால் பலரும் டவுன்லோட் செய்து முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த முறை தடுக்கப்பட்டு உள்ளது.
முகாம்கள்: இந்த டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் சென்னையில் இதற்காக வரும் 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 650 ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி!












Click it and Unblock the Notifications