எப்படி போய் தலைகுப்புற பள்ளத்தில் "லேன்ட்டாகியிருக்கு" டாக்டர் கார் பாருங்க! சென்னையில் பரபர சம்பவம்
சென்னை: முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் மருத்துவரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை அடையார் கஸ்தூரிபா நகர் 3வது தெருவில் சிட்டி டவர் என்ற அடுக்குமாடி அலுவலக கட்டடம் உள்ளது.
Recommended Video
இந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் என்ற நீட் பயிற்சி மையத்தில் மருத்துவ பேராசிரியராக ஆந்திராவைச் சேர்ந்த நாகமல்லையா என்பவர் பணியாற்றி வருகிறார்.

5 அடி பள்ளம்
இந்த நிலையில் இன்று காலை இவர் தனது ஹூண்டாய் க்ரெட்டா காரில் அலுவலகம் வந்து கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். பின்பு பணியை முடித்துவிட்டு 6 மணி அளவில் தனது காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு மாநகராட்சி ஒப்பந்ததார்கள் முன் அறிவிப்பின்றி தோண்டிய 5 அடி ஆழத்திற்கும் அதிகமான பள்ளத்தில் கார் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்துள்ளது. v

போக்குவரத்து நெரிசல்
இந்த விபத்தால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அடையாறு போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீராக்கினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை அலுவலகத்தின் வெளியே முன்பு எந்தவித பள்ளமும் இல்லை என்பது தெரியவந்தது.

ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் அலுவலகத்தை சுற்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மழை நீர் பள்ளம் தோண்டியதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. குறிப்பாக பள்ளத்தை தோண்டி விட்டு அலுவலகம் முடியும் நேரத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் யாரும் வாகன ஓட்டிகளிடம் புதிதாக தோண்டப்பட்ட பள்ளி எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் இருந்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
இதனால் வழக்கம் போல பேராசிரியர் காரை ஓட்டி வெளியே வந்தபோது விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஒப்பந்தகாரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் கார் பாதிப்படைந்த நிலையில் யாருக்கும் எந்தவிமான காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications