தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. நிலைமையை சமாளிக்க சென்னை மாநகராட்சி... எடுத்த அதிமுக்கிய முடிவு
சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மீண்டும், மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் 2123 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று அடுக்கு படுக்கை
சென்னையில் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Array
அதன்படி தொடர் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்குப் பெரிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நல்ல நிலையிலுள்ள நோயாளிகளுக்குச் சிறிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி
அதேநேரம் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் 11,775 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை
தற்போது வரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 1618 படுக்கைகளில் 650 படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னையிலுள்ள 5 அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாகவே மூன்று அடுக்கு சிகிச்சை முறையைப் பின்பற்றச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications