அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க
சென்னை: வரும் நாட்களில் தொடர்ந்து பண்டிகை, விழாக்கள் வர உள்ளதால் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக பல்வேறு பண்டிகைகள், விழாக்கள் நடைபெற உள்ளன.
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி வர உள்ளது. அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது.

பஸ்-ரயில்களில் கூட்டம்
இந்த தொடர் பண்டிகை, விழா காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இதனால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

அலைமோதும் கூட்டம்
தமிழகத்தை பொறுத்தமட்டில் தலைநகர் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதனால் சென்னையில் பண்டிகை, விழாக்காலங்களின் 2 நாட்களின் முன்பிருந்தே பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

8 ரயில் நிலையங்களில் அமல்
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கும். அந்த வகையில் தான் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் சார்பில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் எனும் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 8 ரயில் நிலையங்களில் அமலுக்கு வர உள்ளது.

ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்வு
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமானது ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க அக்டோபர் 1 முதல் 2023 ஜனவரி 31 வரை கட்டண உயர்வு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications