சென்னையில் நாளை முதல் 19ம் தேதி வரை, மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் பெரும் மாற்றம்
சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 19-ஆம்தேதி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகா் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது..
தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே 3-ஆவது ரயில்பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.. இதன் காரணமாக ,தாம்பரம் ரயில் நிலையத்தைக் கடந்துசெல்லும் (வருகை /புறப்பாடு) புறநகா் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம், தடையில்லா சேவை வழங்கிட புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது,

6 நாள் மாற்றம்
இந்தப் புதிய திருத்தப்பட்ட புறநகா் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை 6 நாள்கள் மட்டுமே அமலில் இருக்கும். என்று சென்னை ரயில்வே கோட்டம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

செங்கல்பட்டு வரை
இதேபோல் (நாளை) மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் வைகை, பாண்டியன், காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருச்செந்தூர், செங்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.

புதுச்சேரி ரயில்
இதேபோல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் புறப்படும். குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டும் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை டூ புதுச்சேரி ரயில்கள் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்று வரும். 22ம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 டூ 2 வரை
இதனிடையே சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு நாளை முதல் வரும் 19-ம் தேதி வரையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நேரடியாக செல்லும் மின்சார ரயில் சேவை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பயணிகள் பாதிக்காத வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications