தத்தளிக்கும் சென்னை: சில மணி நேர மழைக்கே சாலைகளில் ஆறாக ஓடும் மழை நீர் - பொதுமக்கள் அவதி
அதிகாலை நேரத்தில் பெய்த மழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால் சென்னை சாலைகளில் ஆறாக தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும் ரயில்வே சுரங்க பாலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில மணி நேர மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கிறது தமிழக தலைநகரம். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் சீரமைப்புபணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் நேற்று அறிவித்தது. வானிலை மையம் கணித்தது போலவே நேற்றிரவு பல மாவட்டங்களில் மழை பெய்தது.
இன்று அதிகாலை முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. சாரலாக தொடங்கிய மழை இடியும் மின்னலுமாக கொட்டித்தீர்தது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இடியுடன் கனமழை
சென்னையில் வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் , அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்பப பெரும்பாலான இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் 45 நிமிடத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிதக்கும் வாகனங்கள்
கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருவெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ரயில்வே சுரங்க பாலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் கார்கள் மிதந்து சென்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ள நீரை அப்புறப்படுத்த ரயில்வே சுரங்க பாலம் மூடப்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் சில கிலோமீட்டர்கள் சுற்றிச்செல்ல வேண்டியதாக தெரிவித்தனர்.

வெள்ளநீர் தேங்கியதால் பாதிப்பு
பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் மழை காலங்களில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி மாநகரம் தத்தளிக்கும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளநீரில் சிக்கி பாதிக்கப்படுவார்கள்.

தத்தளிக்கும் சென்னை
மழைகாலம் தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சில மணி நேரங்கள் எதிர்பாராமல் பெய்த மழைக்கே சென்னை சாலைகளில் ஆறாக பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முக்கிய சாலையான அண்ணாசாலை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகே சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஒடி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னைவாசிகள் கோரிக்கை
மழைநீர் வடிகால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது குறித்து சென்னை மாநகராட்சியினர் பல நடவடிக்கை எடுப்பதாக அவ்வப்போது செய்தி வெளியிட்டாலும் நடைமுறை என்னவோ சென்னையில் சில மணி நேர மழைக்கு நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கும் முன்பாக மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின் வாரியம் மின்சார கேபிள்கள் வெளியில் தெரிந்தால் அதை முறையாக சரி செய்து மழை நீரில் மின்சாரம் பாயாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மறக்கமுடியாத வெள்ளம்
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி வழிந்தன. செம்பரம்பாக்கம் நீர்தேக்கம், புழல் ஏரி நிரம்பியதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் புறநகர் பகுதிகளில் மூழ்கியது. சென்னை நகர்பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. அடையாற்றில் பெருகிய வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்தது. வெள்ளம் வடிய பலமாதங்கள் ஆனது. சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் பாதிப்பும் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாகும்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications