Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்.. சென்னை மருத்துவமனை ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை!

இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் ரூபாயை வட்டியுடன் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 2013ஆம் ஆண்டு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பெண்

இலங்கை பெண்

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஃப்ளோரா. இவர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி அதற்கு லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

மீண்டும் அறுவை சிகிச்சை

மீண்டும் அறுவை சிகிச்சை

அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அடிவயிற்றில் கடுமையான வலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஃப்ளோரா, மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஒப்புதலைப் பெறாமல் இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பின்னர், வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

வழக்கு

வழக்கு

அப்போதுதான், அவரது பெருங்குடலில் சேதம் ஏற்படுத்தப்பட்ட விவகாரம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஃப்ளோரா, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

40 லட்சம் + வட்டி

40 லட்சம் + வட்டி

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜி.சந்திரசேகரன், அந்த தனியார் மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகைக்கு, வழக்கு தொடரப்பட்ட 2014ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+