நவம்பர் 10 - 13 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்... திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!
Recommended Video

சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக லேசான மழையும், தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மழையை கொடுக்காவிட்டாலும் இனி வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது : நேற்று தாய்லாந்து வளைகுடாவை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இதனால் நவம்பர் 10ல் அந்தமான் மற்றும் தென்கிழக்குக் கடல் பகுதி, நவம்பர் 11ல் வங்கக்கடல் பகுதி, வடஅந்தமான் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, நவம்பர் 12ல் மத்திய மேற்கு, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி குமரிக்கடல் இலங்கைக் கடல் மற்றும் இந்தியப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . அவ்வபோது லேசான சாரல் மழை மட்டுமே வரக்கூடும் என்று புவியரசன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications