சென்னை ஈசிஆரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை. பகீர் சிசிடிவி காட்சிகள்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரபல ரவுடி பட்டபகலில் வெட்டிக்கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை நீலாங்கரை புது கணேஷ் நகர் 5வது தெரு சேர்ந்தவர் ஜெரோம் பிரபு 35. இவர் கடந்த ஒரு வருட காலமாக வீடு வாடகை எடுத்து மனைவி ஜாக்லின் 30 மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் பன்னிரண்டு முப்பது மணி அளவில் சேலம் பிரபு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

சரமாரி வெட்டு
அப்பொழுது அங்கு மறைந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக ஜெரோம் பிரபுவின் தலை மார்பு கைகளில் வெட்டி சாய்த்துவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

அலறல் சத்தம்
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பொழுது ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜெரோம் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸ்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிறகு அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

முன்விரோதம்
கொல்லப்பட்ட ஜெரோம் பிரபு மீது பாண்டிச்சேரியில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது அதில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனிடையே ஜெரோம் புதுச்சேரியில் ஒருவரை கொலை செய்ததாகவும் அதன் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications