செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. ‘ஆளப்போறான் தமிழன்’ என மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. கருப்பு சூட் அணிந்து இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா சற்று முன்பு தொடங்கியுள்ளது.

வெற்றி வீரர்களுக்கு பதக்கங்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

நிறைவு விழா
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கருப்பு சூட் அணிந்து இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ‘ஆளப்போறான் தமிழன்' பாடல் பின்னணியில் ஒலிக்காக மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தோனி வரவில்லை
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் தோனி பங்கேற்கவில்லை. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவிருந்தார். ஆனால் அங்கிருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.

கலைநிகழ்ச்சிகள்
நிறைவு விழாவின் தொடக்கமாக, சிறுவர் சிறுமியர், சில விநாடிகளில் ரூபிஸ் கியூப் சால்வ் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் 'ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்தியா , ஸ்டீபன், நவீன் ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications