கோபப்பட்ட “ஜிவிஎம்”.. நெகட்டிவா? விமர்சகர்களுக்கு “சுதந்திரம்” தேவை - “கூலாக” பதிலளித்த வெற்றிமாறன்
சென்னை: திரைப்படங்களை விமர்சிப்பது அவரவரின் சுதந்திரம் என்றும் பாதகமான விமர்சனம் என்றாலும் அவர்கள் நினைப்பதை சொல்வதில் தவறில்லை எனவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதற்கு முன், நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விமர்சனங்களை பார்த்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை பற்றி முடிவு செய்வார்கள்.
ஆனால், இணையதளம் வளர்ந்த பிறகு யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களும் யூடியூபில் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்து படம் பார்க்கத் தொடங்கினர்.

சினிமா விமர்சகர்கள்
இப்படி யூடியூபில் தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சிலருடைய சேனல்களை மட்டுமே மக்கள் அதிகம் பின்பற்றி வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர் ப்ளூ சட்டை என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் மாறன்.

கவுதம் வாசுதேவ் மேனன்
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு மாறன் மிக மோசமான விமர்சனத்தை வழங்கி இருந்தார். இது குறித்து ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டதுபோது, பதிலளித்த கவுதம் கோபமடைந்து இறங்கு ஏதாவது செய்துவிடலாம் என்று தோன்றுகிறது எனக் கூறினார்.

தீர்மானம்
இதற்கிடையே திரைப்படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகே சினிமா விமர்சனங்களை வெளியிட வேண்டும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கும் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

வெற்றிமாறன் பேச்சு
இதற்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பதிலளித்த அவர், "அது அவர்களுடன் சுதந்திரம். நெகட்டிவாக இருக்கிறது என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை சொல்கிறார்கள். விமர்சகர்களுக்கான சுதந்திரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது என்னவாக இருந்தாலும் சரி. படத்தை பற்றி பேசும்போது அவர்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது." என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications