கள்ள ஓட்டு போட முயற்சி என புகார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு
சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஐடி கார்டு இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியற்கு திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ள 13 வது வாக்குச்சாவடியில் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை முன்பாகவே பாஜகவினர் - திமுகவினர் இடையே வாக்கு வாதமும் தொடர்ச்சியாக லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ஐடி கார்டு இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியற்கு திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுகவினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருடன் இணைந்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மயிலாப்பூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக சார்பில் தா வேலுவும் போட்டியிடுகிறார்கள். திமுக மற்றும் பாஜகவினர் இடையேயான வாக்குவாதத்தால் ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications