சும்மா இருக்கக் கூடாது! சாலை -மழைநீர் வடிகால் ரொம்ப முக்கியம்! அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலைகள் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மழைநீர் வடிகால்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுள்ளார்.

ஏனோ தானோ என்று செயல்படாமல் ஒப்பந்தப் பணிகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து ஒப்பந்தாரர்கள் விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கறாராக தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

Cm Stalin directed officials to constantly monitor whether roads are being constructed properly

''மக்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். நமது சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களை அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ''

''ஒவ்வொரு நாளும் நகரங்களில் குப்பைகளை அகற்ற ஒரு பெரிய குழு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் திடக்கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.''

''அரசிடமிருந்து அனைத்து நிதிகளும் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுகிறது. குறிப்பாக பணி ஆணை வழங்கப்பட்டப்பின் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.''

''அனைத்து அலுவலர்களும் இந்த தகவல் பலகைகளைப் பயன்படுத்தி பணிகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, பணியை எடுத்த ஒப்பந்தாரர்கள் விரைவாகவும், தரமாகவும் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+