மண் சார்ந்த பணிகளுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த பரிந்துரை! புது சோதனையால் விழிபிதுங்கும் ஒப்பந்ததாரர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மண்சார்ந்த ஒப்பந்தப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி.யை 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயர்த்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை பரிந்துரை செய்துள்ளது.

இது கால்வாய் தூர்வாருதல், பைப்லைன் போடுதல், உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு புது தலைவலியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே அரசியல் குறுக்கீடுகளால் பலருக்கும் கப்பம் கட்டி அழுகும் ஒப்பந்ததாரர்கள் மண் சார்ந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி. உயர்வால் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

Commercial Taxes and Registration dept Suggestion to increase GST on soil related works

இதனிடையே நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக ஒப்பந்தம் வெளியிடும் துறைகள் புதிய ஜி.எஸ்.டி.வரி விதிகப்படி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல் மண்சார்ந்த பணிகளுக்கு 5% முதல் 12% வரையும் வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோக திட்டங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு 12% முதல் 18% வரையும் ஜி.எஸ்.டி.யை உயர்த்த வணிகவரித்துறை பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் காரணமாக செலவாகும் கூடுதல் நிதிக்கு அனுமதி பெற, சம்பந்தப்பட்ட துறைகள் பணி வாரியாக கூடுதல் நிதி தேவையை மாற்றி மதிப்பீடு செய்து அனுப்புமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜே.சி.பி.இயந்திரம் மூலம் மண் சார்ந்த அரசுப் ஒப்பந்தப் பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் இதன் மூலம் அதிருப்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+